என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 641 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி பெண் பலி
Byமாலை மலர்9 May 2021 9:59 PM GMT (Updated: 10 May 2021 1:50 PM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் பலியானார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 500-ஐ கடந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 177-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா சிகிச்சை பெற்ற 461 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 27 ஆயிரத்து 706-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 218 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 253-ஆக உயர்ந்துள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 725 கொரோனா படுக்கைகள் உள்ளன. இதில் தற்போது 326 படுக்கைகள் காலியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 500-ஐ கடந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 177-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா சிகிச்சை பெற்ற 461 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 27 ஆயிரத்து 706-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 218 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 253-ஆக உயர்ந்துள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 725 கொரோனா படுக்கைகள் உள்ளன. இதில் தற்போது 326 படுக்கைகள் காலியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X