search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மோட்டார் சைக்கிள் மோதி ஐஸ் கம்பெனி ஊழியர் பலி

    கமுதியில் நடந்து சென்ற ஐஸ் கம்பெனி ஊழியர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கமுதி:

    கமுதியில் ராஜநாடார் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் மீனாட்சிசுந்தரம் (வயது45). ஐஸ் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கோட்டைமேடு ரோட்டில் நடந்து சென்றபோது அபிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. 

    இதில் மீனாட்சிசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×