என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவர்னர் மாளிகையில் நாளை உறுதிமொழி - தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்
Byமாலை மலர்9 May 2021 5:27 AM GMT (Updated: 9 May 2021 5:27 AM GMT)
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக பேரவை தலைவராக கவர்னர் நியமித்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டபேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சட்ட சபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக பேரவை தலைவராக கவர்னர் நியமித்துள்ளார்.
இதையடுத்து கு.பிச்சாண்டி நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கவர்னர் முன்பு உறுதிமொழி அல்லது பற்றுறுதி எடுத்துக் கொள்வார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்.
தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி, நாளை மறுநாள் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகராக செயல்படுவார். அப்போது புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X