என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மனைவி மாரியம்மாள்(வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள். நல்லசிவம் கார் டிரைவராக உள்ளார். மாரியம்மாள் தோசை மாவு அரைத்து விற்று வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நல்லசிவம் புதிதாக வீடு கட்டினார். அப்போது மாரியம்மாள் கடன் வாங்கி உள்ளார். மேலும் அவர்களது மூத்த மகளுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்காகவும் மாரியம்மாள் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கணவன்-மனைவி 2 பேருக்கும் வேலை சரியாக இல்லாததால் அவர்களால் வாங்கிய கடன் தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் 2 பேரும் மனவேதனையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாரியம்மாள் நேற்று அதிகாலை வீட்டின் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்