என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிபோதையில் மனைவி குத்திக்கொலை - பெயிண்டர் கைது
Byமாலை மலர்7 May 2021 4:02 PM GMT (Updated: 7 May 2021 4:02 PM GMT)
காவேரிப்பாக்கத்தில் குடிபோதையில் மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் குறவர் காலனி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55) பெயிண்டர். இவரது மனைவி கீதா (51). முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதை கீதா தட்டிக்கேட்டதால், கணவன், மனைவி இடையே அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் முருகன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி கீதாவை கத்தியால் குத்தி உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கீதாவை மீட்டு பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X