search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருவையாறு அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தவர் சாவு

    திருவையாறு அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு அடுத்த திருக்காட்டுப்பள்ளி லயன்கரை காசிகாலனியை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் செல்வநாதன்(30) இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் திருவையாறு வந்துவிட்டு தனது வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருக்காட்டுப்பள்ளி சென்றார்.

    ஆச்சனூர் அருகே மெயின்ரோட்டில் நிலைதடுமாறி சாலை ஓர மரத்தில் மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இது குறித்து செல்வநாதன் மனைவி ஆரியமாலா(28) கொடுத்த புகாரின்பேரில் மருவூர் சப்இன்ஸ்பெக்டர் முத்தழகன் வழக்கு பதிவு செய்து செல்வநாதன் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

    Next Story
    ×