என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி - கே.பி.அன்பழகன்
Byமாலை மலர்6 May 2021 3:17 PM GMT (Updated: 6 May 2021 3:17 PM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகன், பென்னாகரம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி, தர்மபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், அரூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வே.சம்பத்குமார் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வெற்றியைத் தேடி தர இரவு, பகல் பாராது அயராது பாடுபட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு வகையிலும் முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X