என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூரில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் - சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
Byமாலை மலர்6 May 2021 2:48 PM GMT (Updated: 6 May 2021 2:48 PM GMT)
கரூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:
கரூர் ஜந்து ரோடு அருகே அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழியில் அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. பின்னர் அதில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க பட்டு வருகிறது.
இதன்மூலம் அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுடன் ஆடு, மாடுகளுக்கு தேவையான தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் வீணாகி செல்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X