search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    கும்மிடிப்பூண்டி அருகே திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவருக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இவரது மனைவி பொன்னேரியில் அமைந்திருக்கும் தாய் வீடுக்கு சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×