என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்துள்ள அறைகளுக்கு ‘சீல்’
Byமாலை மலர்3 May 2021 8:50 PM GMT (Updated: 4 May 2021 12:20 PM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று இந்த எந்திரங்கள் திறந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடர்ந்து இந்த எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக பல்வேறு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அதன்படி தாராபுரம் (தனி) தொகுதி, பல்லடம் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. காங்கேயம் தொகுதி எந்திரங்கள், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவினாசி (தனி), திருப்பூர் வடக்கு தொகுதி எந்திரங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமையிலும், தாசில்தார் சுந்தரம் முன்னிலையிலும் இருப்பு அறையில் ‘சீல்’ வைக்கப்பட்டன.
மேலும், திருப்பூர் தெற்கு தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி 1-ம் மண்டல அலுவலகமான வேலம்பாளையம் அலுவலகத்திலும், உடுமலை தொகுதியின் எந்திரங்கள், உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் மற்றும் மடத்துக்குளம் தொகுதி எந்திரங்கள் மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்திலும் வைக்கப்பட்டன.
எந்திரங்கள் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன. பாதுகாப்பு அறை குறித்த விவரங்கள் வேட்பாளர்களுக்கும் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களின் தெரிவிக்கப்பட்டு அவர்களது முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டப்பட்டது. இதையடுத்து அந்த அறைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதனை அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதுபோல் சி.சி.டி.வி. கேமராக்கள் கொண்டு தொடர்ந்து கண்காணிக்கும் பணியும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தொடர்ந்து நடைபெறும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
திருப்பூர் பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி. அரசு கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் 5 எந்திரங்கள் பழுதடைந்தன. தாராபுரம் (தனி), திருப்பூர் தெற்கு மற்றும் உடுமலை தொகுதியில் தலா ஒரு எந்திரமும், திருப்பூர் வடக்கு தொகுதியில் 2 எந்திரங்களும் பழுதடைந்தன. இதனால் எந்திரங்களின் ஒளித்திரையில் வாக்கு எண்ணிக்கை காண்பிக்காததால், விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்கு சீட்டுகளை எண்ணி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுபோல் திருப்பூர் வடக்கு தொகுதியில் பயன்படுத்த இருப்புவைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து எடுத்துவரப்பட்டு திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒரு அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று இந்த எந்திரங்கள் திறந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடர்ந்து இந்த எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக பல்வேறு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அதன்படி தாராபுரம் (தனி) தொகுதி, பல்லடம் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. காங்கேயம் தொகுதி எந்திரங்கள், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவினாசி (தனி), திருப்பூர் வடக்கு தொகுதி எந்திரங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமையிலும், தாசில்தார் சுந்தரம் முன்னிலையிலும் இருப்பு அறையில் ‘சீல்’ வைக்கப்பட்டன.
மேலும், திருப்பூர் தெற்கு தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி 1-ம் மண்டல அலுவலகமான வேலம்பாளையம் அலுவலகத்திலும், உடுமலை தொகுதியின் எந்திரங்கள், உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் மற்றும் மடத்துக்குளம் தொகுதி எந்திரங்கள் மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்திலும் வைக்கப்பட்டன.
எந்திரங்கள் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன. பாதுகாப்பு அறை குறித்த விவரங்கள் வேட்பாளர்களுக்கும் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களின் தெரிவிக்கப்பட்டு அவர்களது முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டப்பட்டது. இதையடுத்து அந்த அறைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதனை அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதுபோல் சி.சி.டி.வி. கேமராக்கள் கொண்டு தொடர்ந்து கண்காணிக்கும் பணியும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தொடர்ந்து நடைபெறும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
திருப்பூர் பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி. அரசு கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் 5 எந்திரங்கள் பழுதடைந்தன. தாராபுரம் (தனி), திருப்பூர் தெற்கு மற்றும் உடுமலை தொகுதியில் தலா ஒரு எந்திரமும், திருப்பூர் வடக்கு தொகுதியில் 2 எந்திரங்களும் பழுதடைந்தன. இதனால் எந்திரங்களின் ஒளித்திரையில் வாக்கு எண்ணிக்கை காண்பிக்காததால், விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்கு சீட்டுகளை எண்ணி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுபோல் திருப்பூர் வடக்கு தொகுதியில் பயன்படுத்த இருப்புவைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து எடுத்துவரப்பட்டு திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒரு அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X