என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்3 May 2021 8:46 PM GMT (Updated: 4 May 2021 12:17 PM GMT)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
திருப்பூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு 300-க்கும் குறைவாக இருந்து வந்தது. தற்போது இது கடுமையாக உயர்ந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 519 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 374 ஆக உள்ளது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இதுவரை 242 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பலரையும் அச்சமடைய செய்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு 300-க்கும் குறைவாக இருந்து வந்தது. தற்போது இது கடுமையாக உயர்ந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 519 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 374 ஆக உள்ளது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இதுவரை 242 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பலரையும் அச்சமடைய செய்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X