என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் கல்லூரி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்3 May 2021 3:20 PM GMT (Updated: 3 May 2021 3:20 PM GMT)
கோவில்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த தனியார் கல்லூரி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த முடுக்கு மீண்டான்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் இளையராஜா (வயது 55). தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்த இவருக்கு சுகர், பிரசர், இளைப்பு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இளையராஜாவின் மனைவி சீதாலட்சுமி அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு, திரும்பிவந்து பார்த்த போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாம். கதவை தட்டியும் திறக்காததை அடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இளையராஜா தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புதூர் போலீசார், அவரது சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X