என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது: சி.டி.ரவி
Byமாலை மலர்3 May 2021 3:53 AM GMT (Updated: 3 May 2021 3:53 AM GMT)
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்கி இருக்கின்றன. எனவே இனிமேல் யாரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறக்கூடாது.
சென்னை :
பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுடைய தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம். அமைய உள்ள புதிய அரசுக்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, எங்களின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கும்.
இந்த தேர்தலில் பா.ஜ.க.வினர் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்பு வாக்குகளாக மாறவில்லை. இருப்பினும், பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். முன்பைவிட பா.ஜ.க.வினர் இனி அதிகம் உழைக்க வேண்டும்.
கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்கி இருக்கின்றன. எனவே இனிமேல் யாரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறக்கூடாது.
பா.ஜ.க வேல் யாத்திரை மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுடைய தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம். அமைய உள்ள புதிய அரசுக்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, எங்களின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கும்.
இந்த தேர்தலில் பா.ஜ.க.வினர் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்பு வாக்குகளாக மாறவில்லை. இருப்பினும், பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். முன்பைவிட பா.ஜ.க.வினர் இனி அதிகம் உழைக்க வேண்டும்.
கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்கி இருக்கின்றன. எனவே இனிமேல் யாரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறக்கூடாது.
பா.ஜ.க வேல் யாத்திரை மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X