என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெம்டெசிவிர் மருந்து ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை- தனியார் டாக்டர் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்1 May 2021 8:27 AM GMT (Updated: 1 May 2021 8:27 AM GMT)
மேடவாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக இன்று தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் தீபன் மற்றும் தனியார் மருந்தக ஊழியர் நரேந்திரன் ஆகியோர் சிக்கியுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள்.
இந்த மருந்து வெளி மார்க்கெட்டிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கிடைப்பதில்லை. அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் விற்கப்படுகிறது.
இதை வாங்குவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து டாக்டர்களின் பரிந்துரை கடிதத்துடன் நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை யெடுக்கிறார்கள்.
2 நாட்கள் வரை காத்திருந்தால்தான் மருந்து கிடைக்கிறது. அந்த அளவுக்கு கூட்டம் அலை மோதுகிறது. ஒருவருக்கு 6 குப்பி மருந்து என்ற ரீதியில் விற்கப்படுகிறது. ஒரு குப்பி மருந்தின் விலை ரூ.1560 ஆகும். மொத்தம் 9,360 ரூபாய்.
இந்த நிலையில் மேடவாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக இன்று தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் தீபன் மற்றும் தனியார் மருந்தக ஊழியர் நரேந்திரன் ஆகியோர் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் மருந்து எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து தொடர்ந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எவ்வாறு இந்த மருந்துகள் வெளியே கொடுக்கப்படுகிறது என்பது பற்றி உயர் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள்.
இந்த மருந்து வெளி மார்க்கெட்டிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கிடைப்பதில்லை. அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் விற்கப்படுகிறது.
இதை வாங்குவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து டாக்டர்களின் பரிந்துரை கடிதத்துடன் நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை யெடுக்கிறார்கள்.
2 நாட்கள் வரை காத்திருந்தால்தான் மருந்து கிடைக்கிறது. அந்த அளவுக்கு கூட்டம் அலை மோதுகிறது. ஒருவருக்கு 6 குப்பி மருந்து என்ற ரீதியில் விற்கப்படுகிறது. ஒரு குப்பி மருந்தின் விலை ரூ.1560 ஆகும். மொத்தம் 9,360 ரூபாய்.
ஆனால் இதை சிலர் கள்ளச்சந்தையில் வாங்கி ரூ.20 ஆயிரத்துக்கு மேல் விற்கிறார்கள். அவ்வாறு விற்பனை செய்ததாக தாம்பரம் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் முகமது இம்ரான்கான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த விஜய் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மேடவாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக இன்று தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் தீபன் மற்றும் தனியார் மருந்தக ஊழியர் நரேந்திரன் ஆகியோர் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் மருந்து எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து தொடர்ந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எவ்வாறு இந்த மருந்துகள் வெளியே கொடுக்கப்படுகிறது என்பது பற்றி உயர் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X