என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடவாசலில் காரில் கடத்தி வந்த 144 மதுபாட்டில்கள் பறிமுதல்- வாலிபர் கைது
Byமாலை மலர்1 May 2021 12:45 AM GMT (Updated: 1 May 2021 12:45 AM GMT)
குடவாசலில் காரில் கடத்தி வந்த 144 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குடவாசலில் நன்னிலம் சாலையில் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் காரில் 3 அட்டை பெட்டியில் 144 மதுபாட்டில்கள் இருந்தன. பின்னர் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், குடவாசல் அருகில் உள்ள மூலங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த சாமிநாதன் மகன் மகேந்திரன் (வயது36). என்பதும், மருந்து விற்பனை பிரதிநிதியான இவர், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதால் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்து 144 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X