search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருச்சி அருகே எலக்ட்ரீசியன் மர்ம மரணம்

    திருச்சி அருகே தாயின் இறுதி சடங்குக்கு வந்த எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் காலனியை சேர்ந்த சிவனேசனின் மகன் வேல்முருகன்(வயது 38). இவர் பெங்களூருவில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். வேல்முருகனின் தந்தை ஏற்கனவே இறந்துவிட, திருச்சியில் தனியாக வசித்து வந்த வேல்முருகனின் தாய் ரஞ்சிதம் கடந்த 24-ந்தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் பெங்களூருவில் இருந்து மனைவி, குழந்தைகளுடன் திருச்சிக்கு வந்த வேல்முருகன் தாய்க்கு இறுதிச்சடங்குகளை செய்தார்.

    பின்னர் தனது மனைவி, குழந்தைகளை பெங்களூருக்கு அனுப்பிவிட்டு அவர் மட்டும் தனது தாய் வீட்டில் தனியாக தங்கி இருந்தார். இந்தநிலையில் வேல்முருகன் தங்கி இருந்த வீட்டில் இருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசவே, இதுபற்றி நவல்பட்டு போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினார்கள். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தகவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு படுக்கையில் மர்மமான முறையில், வேல்முருகன் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் உடல் நலக்குறைவால் இயற்கையாக மரணம் அடைந்தாரா? அல்லது தாய் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×