என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு அருகே முன்விரோத தகராறில் இருதரப்பை சேர்ந்த 5 பேர் கைது
Byமாலை மலர்30 April 2021 1:30 PM GMT (Updated: 30 April 2021 1:30 PM GMT)
ஆற்காடு அருகே முன்விரோத தகராறில் இருதரப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 23). இவருக்கும், தாஜ்புரா ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (24) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி சண்முகத்தை, கோகுல்நாத் வழிமறித்து கத்தியால் கீறியதாகக் கூறப்படுகிறது. அதில் படுகாயம் அடைந்த சண்முகம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இருவரின் தகராறை சண்முகத்தின் நண்பர் தனசேகர் என்பவர் விலக்கி உள்ளார். அப்போது கோகுல்நாத்தின் நண்பர்கள் திருவேங்கடம், ராஜ்குமார், மோகன் ஆகியோர் சேர்ந்து கட்டையால் தனசேகரை தாக்கி உள்ளனர்.
இது குறித்து சண்முகம், கோகுல்நாத் ஆகிய இருவரும் தனித்தனியே ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். இரு தரப்பை சேர்ந்த சண்முகம், கோகுல்நாத், திருவேங்கடம் (27), ராஜ்குமார் (27), மோகன் (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X