என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த முதியவர் பலி
Byமாலை மலர்30 April 2021 12:10 PM GMT (Updated: 30 April 2021 12:10 PM GMT)
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் பாளைய்யன் (வயது 73). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் இருந்து திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார்.
அவர் தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் இறங்கினார்.
எதிர்பாராதவிதமாக கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணா கால்வாயில் அடித்து செல்லப்பட்டு இறந்துபோன பாளைய்யனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X