search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு

    பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கொரோனா தொற்று பரவல் காரணமாக சரிவர இயங்காமல் உள்ளது.
    பொம்மிடி:

    பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கொரோனா தொற்று பரவல் காரணமாக சரிவர இயங்காமல் உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பள்ளி ஆய்வகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 7 கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அஜித் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×