search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தர்மபுரி மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா தொற்று

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,067 பேர் கொரோனாபாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 101 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 154 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 1,119 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×