என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்30 April 2021 2:46 AM GMT (Updated: 30 April 2021 2:46 AM GMT)
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
வள்ளியூர்:
நெல்லையில் வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார பகுதிகளில் தற்போது 2-ம் கட்ட கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று வள்ளியூர், ராதாபுரம் வட்டாரத்தில் புதிதாக 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அங்கு மேலும் 51 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர காவல்கிணற்றில் 9 பேர், வள்ளியூரில் 8 பேர், வடக்கன்குளம், கண்ணன்குளம், பணகுடியில் தலா 4 பேர், செட்டிகுளம், புதியம்புத்தூர், தெற்குகள்ளிகுளத்தில் தலா 3 பேர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கொரோனா பாதிப்பு பகுதிகளில் சுகாதார பணிகளை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
நெல்லையில் வள்ளியூர் மற்றும் ராதாபுரம் வட்டார பகுதிகளில் தற்போது 2-ம் கட்ட கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று வள்ளியூர், ராதாபுரம் வட்டாரத்தில் புதிதாக 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அங்கு மேலும் 51 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர காவல்கிணற்றில் 9 பேர், வள்ளியூரில் 8 பேர், வடக்கன்குளம், கண்ணன்குளம், பணகுடியில் தலா 4 பேர், செட்டிகுளம், புதியம்புத்தூர், தெற்குகள்ளிகுளத்தில் தலா 3 பேர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கொரோனா பாதிப்பு பகுதிகளில் சுகாதார பணிகளை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X