என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது வாங்கி கொடுத்ததில் தகராறு: வாலிபர் கைது - பெண் மீது வழக்கு
Byமாலை மலர்29 April 2021 1:01 PM GMT
அரவக்குறிச்சி அருகே மது வாங்கி கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கைது செய்த போலீசார் பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி புதுகாலனியை சேர்ந்தவர்கள் விஜய் (வயது 38). இவரது நண்பர் துரைராஜ். இவர் 2 பேரும் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக சிவக்குமாரின் மைத்துனர் கார்த்திக் (30), அவருடைய மனைவி அம்பிகா, அம்பிகாவின் அக்கா ராணி ஆகியோர் விஜய் மற்றும் துரைராஜியிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் குக்கர் மூடியாலும், ராணி கல்லாலும் விஜய்யை தாக்கி உள்ளனர்.
இதையடுத்து விஜய் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்து அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். மேலும் ராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X