search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    தென்காசியில் நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் மாயம்

    தென்காசியில் நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங். இவரது மனைவி கவுரி. நேபாளம் நாட்டை சேர்ந்த தம்பதி 2 பேரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி வந்துள்ளனர்.

    இவர்களது மகள் ரூபாசிங் (வயது 19). கடந்த சில வருடங்களுக்கு முன்பு பகதூர் சிங் இறந்துவிட்டார். இதனால் தாய்-மகள் இருவரும் வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் வீட்டில் இருந்த ரூபா சிங்கை திடீரென காணவில்லை.

    உடனே கவுரி அந்த பகுதியில் தேடி பார்த்துள்ளார். மேலும் இரவு வெகுநேரமாகியும் ரூபாசிங் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கவுரி தென்காசி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து மாயமான ரூபாசிங் பற்றி விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வருகிறார்.

    மேலும் இளம்பெண் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக தென்காசி போலீஸ் நிலைய செல்போன் எண் 9498101781-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×