என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தென்காசியில் நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் மாயம்
தென்காசி:
தென்காசி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங். இவரது மனைவி கவுரி. நேபாளம் நாட்டை சேர்ந்த தம்பதி 2 பேரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி வந்துள்ளனர்.
இவர்களது மகள் ரூபாசிங் (வயது 19). கடந்த சில வருடங்களுக்கு முன்பு பகதூர் சிங் இறந்துவிட்டார். இதனால் தாய்-மகள் இருவரும் வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் வீட்டில் இருந்த ரூபா சிங்கை திடீரென காணவில்லை.
உடனே கவுரி அந்த பகுதியில் தேடி பார்த்துள்ளார். மேலும் இரவு வெகுநேரமாகியும் ரூபாசிங் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கவுரி தென்காசி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து மாயமான ரூபாசிங் பற்றி விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வருகிறார்.
மேலும் இளம்பெண் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக தென்காசி போலீஸ் நிலைய செல்போன் எண் 9498101781-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்