search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா பலி 505 ஆக உயர்வு - சேலம் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தம்

    சேலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற நோயாளிகளுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் அதையும் மீறி கொரோனா வேகமாக பரவி வருகிறது.

    நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது.

    இவர்களில் 36 ஆயிரத்து 327 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 ஆயிரத்து 533 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தை சேர்ந்த 56, 57, 64, 71 வயதை சேர்ந்த முதியவர்கள் அடுத்தடுத்து இறந்தனர். இதே போல 58 வயது ஆண் ஒருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பலியானார். இதனால் நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

    இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கடந்த 3 நாட்களில் மட்டும் தலா 5 பேர் பலியாகி உள்ளனர்.

    சேலம் மாநகராட்சியில் 79 பகுதிகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 170 களப்பணியாளர்கள் வீதம் 650 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கொரோனா தீவிரம் அடைந்துள்ளதால் சேலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற நோயாளிகளுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் அவசர கால அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா சாவு அதிகரித்து வருவதால் அனைத்து டாக்டர்களும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×