என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘ரெம்டெசிவிர்’ மருந்து மற்ற மாவட்டங்களில் விற்பனை செய்ய திட்டம்
Byமாலை மலர்29 April 2021 9:32 AM GMT (Updated: 29 April 2021 9:32 AM GMT)
ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை. அதனை போட்டுக்கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கலாம்.
சென்னை:
கொரோனா தொற்று பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இது அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையின் அடிப்படையில் கட்டணம் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் மருந்து கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இதை தொடர்ந்து சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இங்கு ஒரே இடத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இரவு பகலாக காத்திருக்கிறார்கள். கூட்டத்தை குறைப்பதற்காக மற்ற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை. அதனை போட்டுக்கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கலாம். மற்றபடி இந்த மருந்தை போட்டால்தான் கொரோனாவில் இருந்து குணமடைவோம் என்ற சூழ்நிலை இல்லை.
எந்தெந்த மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகமாக உள்ளதோ அதற்கேற்ப அங்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகிற 1-ந் தேதி முதல் தடுப்பூசி போட முன்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 3.5 கோடி பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தொற்று பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இது அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையின் அடிப்படையில் கட்டணம் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் மருந்து கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இதை தொடர்ந்து சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இங்கு ஒரே இடத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இரவு பகலாக காத்திருக்கிறார்கள். கூட்டத்தை குறைப்பதற்காக மற்ற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை. அதனை போட்டுக்கொண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கலாம். மற்றபடி இந்த மருந்தை போட்டால்தான் கொரோனாவில் இருந்து குணமடைவோம் என்ற சூழ்நிலை இல்லை.
எனவே மருந்து தேவைப்படக்கூடிய நோயாளிகள் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம். தேவையான மருந்து இருப்பு உள்ளது. தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இந்த மருந்து சப்ளை செய்யப்படுகிறது.
எந்தெந்த மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகமாக உள்ளதோ அதற்கேற்ப அங்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகிற 1-ந் தேதி முதல் தடுப்பூசி போட முன்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 3.5 கோடி பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X