என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் நகை பட்டறையில் 38 பவுன் கொள்ளை
மதுரை:
மதுரை தெற்கு மாசி வீதி, சொக்ககொத்தன் தெருவைச் சேர்ந்தவர் உத்தம்பக்ரியா (வயது 34). இவர் கான்சா மேட்டுத்தெரு, மேட்டுக்கம்மாளத்தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
இவரிடம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமித்ஷா என்பவர் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று நகை பட்டறையில் இருந்த 38 பவுன் நகை திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த உத்தம்பக்ரியா பட்டறையில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். அதில், நகை பட்டறையில் வேலை பார்க்கும் அமித்ஷா நகையை திருடிச் சென்றுள்ளார் என கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன் தலைமறைவான அமித்ஷாவை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சேர்ந்தவர் ராயப்பராஜ். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 35). மதுரை வந்திருந்த இவர் தூத்துக்குடி செல்ல எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் நின்றிருந்தார்.
அப்போது அவரது கைப்பையை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். அதில் 5 பவுன் நகை இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்