search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மதுரையில் நகை பட்டறையில் 38 பவுன் கொள்ளை

    மதுரையில் நகை பட்டறையில் 38 பவுன் கொள்ளை மேற்கு வங்க வாலிபருக்கு வலைவீச்சு

    மதுரை:

    மதுரை தெற்கு மாசி வீதி, சொக்ககொத்தன் தெருவைச் சேர்ந்தவர் உத்தம்பக்ரியா (வயது 34). இவர் கான்சா மேட்டுத்தெரு, மேட்டுக்கம்மாளத்தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

    இவரிடம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமித்ஷா என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று நகை பட்டறையில் இருந்த 38 பவுன் நகை திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த உத்தம்பக்ரியா பட்டறையில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். அதில், நகை பட்டறையில் வேலை பார்க்கும் அமித்ஷா நகையை திருடிச் சென்றுள்ளார் என கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன் தலைமறைவான அமித்ஷாவை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சேர்ந்தவர் ராயப்பராஜ். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 35). மதுரை வந்திருந்த இவர் தூத்துக்குடி செல்ல எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் நின்றிருந்தார்.

    அப்போது அவரது கைப்பையை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். அதில் 5 பவுன் நகை இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    Next Story
    ×