search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    குற்றாலம் அருகே விபத்து- நாதஸ்வர கலைஞர் பலி

    குற்றாலம் அருகே விபத்தில் நாதஸ்வர கலைஞர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது42). இவர் அங்குள்ள முருகன் கோவிலில் நாதஸ்வர கலைஞராக இருந்தார்.

    சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் குற்றாலம் அருகே சென்ற போது மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்தார்.

    பலத்த காயம் அடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×