என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்27 April 2021 6:09 PM GMT (Updated: 27 April 2021 6:09 PM GMT)
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி அலமேலு (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அண்ணாதுரை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகன், பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி விட்டது.
இதனால் வீட்டில் தனியாக வசித்து வரும் அலமேலு ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே ஆடுகளுக்கு பாதுகாப்பாக கட்டிலில் அலமேலு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு உள்ளாடை மட்டும் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அலமேலு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால், திடுக்கிட்டு எழுந்த அலமேலு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.
அவரது சத்தத்தை கேட்டு எழுந்த அக்கம், பக்கத்தினர் திருடனை பின் தொடர்ந்து ஓடினர். ஆனால் அந்த மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் அலமேலு கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி அலமேலு (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அண்ணாதுரை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகன், பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி விட்டது.
இதனால் வீட்டில் தனியாக வசித்து வரும் அலமேலு ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே ஆடுகளுக்கு பாதுகாப்பாக கட்டிலில் அலமேலு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு உள்ளாடை மட்டும் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அலமேலு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால், திடுக்கிட்டு எழுந்த அலமேலு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.
அவரது சத்தத்தை கேட்டு எழுந்த அக்கம், பக்கத்தினர் திருடனை பின் தொடர்ந்து ஓடினர். ஆனால் அந்த மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் அலமேலு கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X