என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே கிடப்பில் போடப்பட்ட கல்லாற்று சாலை பணி
Byமாலை மலர்26 April 2021 12:48 PM GMT (Updated: 26 April 2021 12:48 PM GMT)
பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் அழகர்சாமிபுரம் உள்ளது. இங்கு இருந்து கல்லாற்றுக்கு செல்வதற்காக கிராம சாலை உள்ளது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் அழகர்சாமிபுரம் உள்ளது. இங்கு இருந்து கல்லாற்றுக்கு செல்வதற்காக கிராம சாலை உள்ளது. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் இந்த சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் கொட்டி பரப்பப்பட்டது. ஆனால் அதன்பின் பல மாதங்களாக சாலைப்பணி தொடங்காமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் நிலை உள்ளது. எனவே நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை உடனடியாக தொடங்க நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X