என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்25 April 2021 10:43 PM GMT (Updated: 26 April 2021 12:29 PM GMT)
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்து அரசு உத்தரவிட்டது
அனுப்பர்பாளையம்:
முழு ஊரடங்கையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
மேலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் அடைக்கப்பட்டிருந்தது. முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் நேற்று முன்தினம் இரவே மது பிரியர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்தனர்.
இதற்காக மதுவை வாங்க டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முண்டியடித்தபடி குவிந்தனர். சிலர் நீண்டநேரம் காத்திருந்து மொத்தமாகவும் மது வகைகளை வாங்கிச்சென்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் ரூ.6 கோடியே 15 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முழு ஊரடங்கையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
மேலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் அடைக்கப்பட்டிருந்தது. முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் நேற்று முன்தினம் இரவே மது பிரியர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்தனர்.
இதற்காக மதுவை வாங்க டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முண்டியடித்தபடி குவிந்தனர். சிலர் நீண்டநேரம் காத்திருந்து மொத்தமாகவும் மது வகைகளை வாங்கிச்சென்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் ரூ.6 கோடியே 15 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X