என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீர் பாட்டிலால் தாக்குதல்: பார் உரிமையாளர் காயம்
Byமாலை மலர்25 April 2021 12:25 PM GMT (Updated: 25 April 2021 12:25 PM GMT)
குடிபோதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த பார் உரிமையாளர் செல்வராஜை, தகராறில் ஈடுபட்டவர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையையொட்டி பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் குடிபோதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த பார் உரிமையாளர் செல்வராஜை, தகராறில் ஈடுபட்டவர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் செல்வராஜிக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மேலும் பாரில் வேலை செய்தவர்களையும் தாக்க முயன்ற அந்த கும்பல், பாரின் மேற்கூரையையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அருகில் உள்ள டாஸ்மாக் கடை மீதும் பாட்டில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த செல்வராஜ், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அ.தி.மு.க.வில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X