என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பாரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு வாலிபர் கைது
Byமாலை மலர்25 April 2021 10:36 AM GMT (Updated: 25 April 2021 10:36 AM GMT)
பாப்பாரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகை திருடிய பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் ஓசூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகராணி (வயது 38). இவர் தொட்லாம்பட்டியில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 20-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த போது கதவு திறந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து நாகராணி பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது நாகராணியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவா (26) என்ற வாலிபர் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் சிவாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நகைகளை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X