search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கூத்தாநல்லூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    கூத்தாநல்லூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கூத்தாநல்லூர்:

    கூத்தாநல்லூர் அருகே உள்ள சேந்தனாங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது47). கூலித்தொழிலாளி. அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பிறகும், வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜ்மோகன் சம்பவத்தன்று குறுனை மருந்து (விஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். 

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×