என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் பகுதியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பஸ் டிரைவருக்கு அபராதம்
Byமாலை மலர்25 April 2021 10:14 AM GMT (Updated: 25 April 2021 10:14 AM GMT)
பாபநாசம் பகுதியில் தனியார் பேருந்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக பயணிகளை ஏற்றி சென்ற பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் தாலுகா ராஜகிரி மற்றும் பண்டாரவாடை வருவாய் கிராமங்களில் வருவாய்த்துறை, காவல்துறை சார்பில் பொதுஇடங்களில் முக கவசம் அணியாத 5 பேருக்கு தலா 200 வீதம் ரூ.1000 அபராதம் விதித்து புது முக கவசம் வழங்கப்பட்டது.
மேலும் பண்டாரவாடை பிரதான சாலையில் சென்ற தனியார் பேருந்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்தது.
உடனடியாக பாபநாசம் சரக வருவாய் ஆய்வாளர் சரவணன் பேருந்தை நிறுத்தி நடத்துனரிடம் அரசு வழிகாட்டு நெறிமுறைபடி அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மிகாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அபராதமும் விதிக்கப்பட்டது.
இப்பணியின் போது தலைமை காவலர் ஞானசேகர், கிராம நிர்வாக அலுவலர் பழனிகுமார், கிராம உதவியாளர்கள் கார்த்திக், முகமது பாட்சா, புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X