என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிணற்றில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஜெயபால். இவரது மகன் லோகேஸ் (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று தனது நண்பரின் பிறந்தநாளை முன்னிட்டு என்.எஸ்.நகர் பகுதிக்கு மேலும் சில நண்பர்களுடன் சென்றார்.
பழைய கரூர் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் அங்குள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கினர்.
அதன் பிறகு ஒவ்வொருவராக மேலே வந்த நிலையில் லோகேஸ் மட்டும் வரவில்லை. அவரை கிணற்றுக்குள் தேடிய போது நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.
மேலும் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு முழுவதும் மாணவனை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.
ஆனால் வெளிச்சம் இன்மை காரணமாக மாணவனை மீட்க முடியவில்லை. இன்று காலையில் கயிறு கட்டி லோகேஸ் உடலை மேலே கொண்டு வந்தனர்.
அவரது உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்