search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம்
    X
    கூடங்குளம்

    கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் உள்ளன.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் உள்ளன. இதில் 2-வது அணு உலையில் எரிபொருட்கள் நிரப்புதல் மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    அணு உலையில் பராமரிப்பு பணிகளையும், புதிதாக செறிவூட்டப்பட்ட யுரோனியம் எரிபொருள் நிரப்பும் பணிகளிலும் ரஷிய மற்றும் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகள் நிறைவடைந்து நேற்று முன்தினம் இரவு 12.35 மணி அளவில் இருந்து 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 230 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை எட்டும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×