என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பிரெட்டிப்பட்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
Byமாலை மலர்24 April 2021 10:27 AM GMT (Updated: 24 April 2021 10:27 AM GMT)
பாப்பிரெட்டிப்பட்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் இறந்தான்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சக்கரவர்த்தி (வயது 10). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த சிறுவன் நேற்று தனது அக்கா சசிகலாவுடன் ஆடு மேய்க்க அங்குள்ள நானா குட்டைக்கு சென்றான்.
அப்போது அந்த குட்டையில் அதேபகுதியை சேர்ந்த சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். இதை கண்ட சிறுவன் சக்கரவர்த்தியும் குட்டைக்கு சென்று குளித்தான். சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் குட்டையில் தண்ணீரில் தத்தளித்தான். இதனால் மற்ற சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுவனை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் ெதரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். சிறுவன் குட்டையில் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சக்கரவர்த்தி (வயது 10). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த சிறுவன் நேற்று தனது அக்கா சசிகலாவுடன் ஆடு மேய்க்க அங்குள்ள நானா குட்டைக்கு சென்றான்.
அப்போது அந்த குட்டையில் அதேபகுதியை சேர்ந்த சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். இதை கண்ட சிறுவன் சக்கரவர்த்தியும் குட்டைக்கு சென்று குளித்தான். சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் குட்டையில் தண்ணீரில் தத்தளித்தான். இதனால் மற்ற சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுவனை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் ெதரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். சிறுவன் குட்டையில் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X