என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சுவாமிமலை அருகே சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து
சுவாமிமலை:
குத்தாலம் பட்டவெளி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு கமலி, ஹெலன், சூரியா என மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
இதில் முதல் மகள் கமலியை கும்பகோணம் மேலக்காவேரி பட்டகால் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாண்டியன் திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகள் ஹெலனை கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் ஆத்மநாதனும், சூரியாவை திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசண்முகமும் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் பணி ஓய்வுக்கு பின்னர் வந்த பணத்தை பங்கிட்டு கொள்வது தொடர்பாக அவரது மருமகன்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு கிருஷ்ணமூர்த்தி தனது மூத்த மகள் கமலி வீட்டுக்கு வந்துள்ளார். இது தெரிந்து கொண்ட ஆத்மநாதனும், பாலசண்முகமும் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த பாண்டியனின் தந்தை விவசாயியான சுப்பிரமணியன், அவரது தம்பி சரவணன் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ்காரர் ஆத்மநாதன், பாலசண்முகம், ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்