என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை அருகே லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி
நெல்லை:
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் முகிலன் துரை அரசன் (வயது22). டி.வி. மெக்கானிக். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் டி.வி.யை பழுது பார்ப்பதற்காக முகிலன் துரை அரசன் மோட்டார் சைக்கிளில் சீதபற்பநல்லூர் பகுதிக்கு சென்றார்.
அவருடன் அவரது நண்பர் சிவநேச பெருமாள் என்பவரும் உடன் சென்றார். சீதபற்பநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முகிலன் துரை அரசன் பரிதாபமாக உயிரிழந்தார். சிவநேச பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலப்பாளையம் அருகே உள்ள பாரதியார் புரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது24). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று பணி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் ஆரைக்குளம் மேம்பாலம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்