search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் 3,842 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 51 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 95048 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 8078 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 044 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பரிசோதனை


    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 46
    செங்கல்பட்டு - 985
    சென்னை - 3842
    கோவை - 889
    கடலூர் - 209
    தர்மபுரி - 121
    திண்டுக்கல் - 227
    ஈரோடு - 331
    கள்ளக்குறிச்சி - 72
    காஞ்சிபுரம் - 395
    கன்னியாகுமரி - 218
    கரூர் - 105
    கிருஷ்ணகிரி - 370
    மதுரை - 502
    நாகை - 170
    நாமக்கல் - 195
    நீலகிரி - 54
    பெரம்பலூர் - 10
    புதுக்கோட்டை - 104
    ராமநாதபுரம் - 94
    ராணிப்பேட்டை - 228
    சேலம் - 478
    சிவகங்கை - 76
    தென்காசி - 173
    தஞ்சாவூர் - 333
    தேனி - 184
    திருப்பத்தூர் - 148
    திருவள்ளூர் - 807
    திருவண்ணாமலை - 176
    திருவாரூர் - 128
    தூத்துக்குடி - 371
    திருநெல்வேலி - 517
    திருப்பூர் - 295
    திருச்சி - 320
    வேலூர் - 297
    விழுப்புரம் - 160
    விருதுநகர் - 146

    மொத்தம் - 13,776

    Next Story
    ×