search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    நாமகிரிப்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம்

    நாமகிரிப்பேட்டையில் உள்ள வட்டார மேல்நிலை அரசு சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
    நாமகிரிப்பேட்டை:

    நாமகிரிப்பேட்டையில் உள்ள வட்டார மேல்நிலை அரசு சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர்கள் குழு 45 வயதுக்கு மேற்பட்டவர்களை பரிசோதித்து தடுப்பூசி போட்டனர்.

    இதற்கிடையே எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலான பயனாளிகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி மற்றும் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் முன் அறிவிப்பு செய்து விட்டு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×