என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்23 April 2021 11:47 AM GMT (Updated: 23 April 2021 11:47 AM GMT)
கபிஸ்தலம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை ஊராட்சியில் சுதர்மன் தெருவில் வசிப்பவர் பழனிசாமி விவசாயி. இவரது மகள் சிவசங்கரி (வயது 18). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார்.
இவருக்கு நீண்ட நாட்களாக குடல் புண் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. பல்வேறு மருத்துவனையில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் மனமுடைந்த சிவசங்கரி விஷ பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசங்கரி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X