search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கபிஸ்தலம் அருகே கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

    கபிஸ்தலம் அருகே கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை ஊராட்சியில் சுதர்மன் தெருவில் வசிப்பவர் பழனிசாமி விவசாயி. இவரது மகள் சிவசங்கரி (வயது 18). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார்.

    இவருக்கு நீண்ட நாட்களாக குடல் புண் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. பல்வேறு மருத்துவனையில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் மனமுடைந்த சிவசங்கரி வி‌ஷ பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசங்கரி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×