என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகம் மீது தாக்குதல் - 2 பேர்கைது
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் கொரானா தொற்று பரவாமல் தடுக்க முக கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களிடம பேரூராட்சி நிர்வாகத்தினர் அபராதம் வசூல் செய்து வருகின்றனர்.
பேரூராட்சி நிர்வாக அலுவலர் நெடுஞ்செழியன் திருக்காட்டுப்பள்ளியில் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலித்து வந்தார். அவ்வாறு வசூலித்து வந்த பிறகு அலுவலகத்தில் இருக்கும் போது திருக்காட்டுப்பள்ளி லைன்கரை மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்திற்குள் கற்கள், கம்புகளை வீசி எறிந்து, பேரூராட்சி நிர்வாக அலுவலரை தரக்குறைவாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்செழியன் திருக்காட்டுப்பள்ளி போலீசில் ஆனந்தன் , மகேந்திரன் ,ராஜி ,சரவணன், மோகன், சிவா ,ஆகியோர் அலுவலகத்திற்கு வந்து கற்களையும் கம்புகளை வீசி தரக்குறைவாக பேசியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்தாககவும் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி வழக்குப்பதிவு செய்து திருக்காட்டுப்பள்ளி சேர்ந்த ஆனந்தன் (21) சரவணன் (20) இரண்டு பேரையும் கைது செய்து மற்ற 4 பேரையும் தேடி வருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்