என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் தற்கொலைக்கு முயன்றவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
Byமாலை மலர்23 April 2021 10:42 AM GMT (Updated: 23 April 2021 10:42 AM GMT)
மதுரையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
மதுரை:
மதுரை வலயங்குளம் சவுராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி.
கணேசனுக்கு கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக வேலை இல்லை. அவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார். அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து சண்டை போட்டு சென்றனர். வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேசன் சம்பவத்தன்று இரவு சோளங்குருணி பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கணேசனுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் கணேசனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவ நிபுணர்கள் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை செய்து வந்தனர். ஆனாலும் பலனின்றி கணேசன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
பெருங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசீர்கான் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை வலயங்குளம் சவுராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி.
கணேசனுக்கு கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக வேலை இல்லை. அவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார். அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து சண்டை போட்டு சென்றனர். வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேசன் சம்பவத்தன்று இரவு சோளங்குருணி பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கணேசனுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் கணேசனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவ நிபுணர்கள் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை செய்து வந்தனர். ஆனாலும் பலனின்றி கணேசன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
பெருங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசீர்கான் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X