என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் தன்னுடன் பேசக்கூடாது என கூறிய இளம்பெண்ணின் தாயை தாக்கிய வாலிபர் கைது
கோவை:
கோவை கணபதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கம்பெனியில் கடந்த 2½ ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
அப்போது அதே கம்பெனியில் ஊழியராக வேலை பார்க்கும் கணபதி கணேஷ் லே-அவுட்டை சேர்ந்த கலைக்கோவன் (வயது 32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை இளம்பெண்ணின் தாய் கண்டித்தார். இதனால் அவர் கலைக்கோவனிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று இளம்பெண்ணும், அவரது தாயாரும் வீட்டு முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கலைக்கோவன் தாய், மகள் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசினார். இதனை இளம்பெண்ணின் தாய் கண்டித்தார். இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த கலைக்கோவன் இளம்பெண்ணின் தாயின் தலைமுடியை இழுத்து பிடித்து கீழே தள்ளி விட்டு அங்கு இருந்து சென்றார்.
இது குறித்து இளம்பெண்ணின் தாய் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலைக்கோவனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்