search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறிய 450 பேருக்கு அபராதம்

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று நடைபெற்ற சோதனையின்போது முக கவசங்கள் அணியாமல் பொது இடங்களுக்கு சென்ற 406 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களுக்கு ரூ.81ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதி மீறலில் ஈடுபட்ட 44 பேருக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் விதி மீறலில் ஈடுபட்ட 450 பேரிடம் மொத்தம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
    Next Story
    ×