search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    திருவையாறில் கணவர் திடீர் மாயம்- மனைவி போலீசில் புகார்

    திருவையாறில் கணவர் திடீரென மாயமானது குறித்து அரவது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    திருவையாறு:

    திருவையாறு புஷ்ய மண்டபத் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் வீட்டிற்கு இவருடைய உறவினரான கேரளா மாநிலம் பாலக்காடு கோகுல்தெருவை சேர்ந்த லெட்சுமணன் (70) வந்தார்.

    இவர் கேரளாவில் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்க்கிறார். இவர் மனைவி அனுசுயா (60) இருவரும் வந்து இங்கு தங்கி தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு லெட்சுமணன் அவரது மனைவி அனுசுயா, ரவி வீட்டில் வந்து தங்கியிருந்தனர். நேற்று லெட்சுமணனை காணவில்லையாம்.

    பல இடங்களிலும் தேடி பார்த்து கிடைக்காததால் அனுசுயா திருவையாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து லெட்சுமணனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×