என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை
Byமாலை மலர்23 April 2021 9:27 AM GMT (Updated: 23 April 2021 9:27 AM GMT)
விழுப்புரம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் தாலுகா போலீஸ் சரகம் டி.மேட்டுபாளையம் கொய்யாதோப்பு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவர் புதுவையில் உள்ள தனியார் வங்கியில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி குப்பு. இவர்களது மகன் முத்துகிருஷ்ணன்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குப்பன் வங்கி பணி தொடர்பாக வெளி ஊருக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மகன், மனைவி இருந்தனர். நேற்று இரவு இவர்கள் 2 பேரும் கதவை பூட்டிவிட்டு காற்றுக்காக மொட்டை மாடியில் தூங்கினர்.
நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் கதவின் பூட்டை இரும்பு ராடால் நெம்பி திறந்தனர். அவர்கள் வந்த தடயம் தெரியாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் மிளகாய்பொடி தூவிவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரொக்கபணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை முத்துகிருஷ்ணன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோ திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த தகவலை தனது தாயார் குப்புவிடம் தெரிவித்தார். அவர் பதறியடித்தபடி கீழே இறங்கி வந்தார். பீரோவை பார்த்தபோது அதில் இருந்த ரூ.8500 பணம் மட்டும் கொள்ளைபோய் இருந்தது. நகைகளை வேறு இடத்தில் வைத்திருந்ததால் அது தப்பியது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள் ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக் கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சாலையோரம் ஓடி நின்றது.
எனவே கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொள்ளையர்களின் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து துப்புதுலக்கி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X