என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வைகை அணையில் குளிக்க சென்ற புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் நீரில் மூழ்கி பலி
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்கரன்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ராஜ்குமார் (வயது 30). எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
ராஜ்குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் (வயது 45) என்பவரும் வைகை அணை பகுதிக்கு குளிக்க சென்றனர். பிக்அப் டேம் பகுதியில் அவர்கள் குளித்துக் கொண்டு இருந்தபோது நீரின் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர்.
நீண்ட நேரமாக அவர்கள் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். பிக்-அப் டேம் அருகே அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் உடைகள் ஆகியவை இருந்தது.
இதனால் அவர்கள் அணைக்கு குளிக்க வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைகை அணை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு வந்து தேடிப்பார்த்தனர். ஆனால் இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இன்று காலை மீண்டும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவர்களை தேடினர். அப்போது இருவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதனையடுத்து அவர்களது உடல்களை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்