என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி
Byமாலை மலர்22 April 2021 11:16 PM GMT (Updated: 23 April 2021 7:19 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே நேற்று மட்டும் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 191-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 265 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தற்போது மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 771-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2 ஆயிரத்து 186 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த 61 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 234-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே நேற்று மட்டும் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 191-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 265 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தற்போது மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 771-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2 ஆயிரத்து 186 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த 61 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 234-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X